Show all

பெற்ற குழந்தைகளை வறுமையின் கொடுமையால் கொலை செய்த தந்தை

பெங்களூருவில், பள்ளி கட்டணத்தைச் செலுத்த முடியாத விரக்தியில், தந்தையே 2 குழந்தைகளைக் கொன்று சாக்கடை கால்வாயில் வீசியுள்ளார். இது தொடர்பாக குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பெங்களூருவில் உள்ள கே.பி.அக்ரஹாரா பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி சிவக்குமார்- தாயம்மா தம்பதியருக்கு, 2  குழந்தைகள் இருந்தனர். இவர்கள், அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில், 4 மற்றும் 2 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குழந்தைகளைக் காணாமல் தாயம்மா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் எவ்வித சலனமும் இல்லாமல் இருந்த சிவக்குமார் மீது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் அருகிலுள்ள சாக்கடை கால்வாய்க்கு சிவக்குமார் அடிக்கடி சென்று பார்த்து வந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உறவினர்கள் மிரட்டி கேட்ட போது, பள்ளி கட்டணத்தைக் கட்ட முடியாததால் இருவரையும் கொலை செய்து சாக்கடையில் வீசியதாக சிவக்குமார் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 5 மணி நேரத்திற்கும் மேல் போராடி இரண்டு குழந்தைகளின் சடலங்களை மீட்டனர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக குழந்தைகளின் சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.  பெற்ற குழந்தைகளை வறுமையின் கொடுமையால் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.