இந்திய விமானப்படைக்குச்
சொந்தமான சு-30 எனப்படும் சுகோய்-30 விமானத்தில், இந்திய விமானிகள் இன்று பயிற்சியில்
ஈடுபட்டிருந்தபோது, திடீரெனக் காணாமல்போனது. அசாம் மாநிலம், தேஜ்பூர் அருகே இரண்டு விமானிகள்,
சு-30 விமானத்தில் பயிற்சி மேற்கொண்டு இருந்தனர். அப்போது, ரேடார் சிக்னலில் இருந்து
கிட்டத்தட்ட 60 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் காணாமல் போனதாகத் தகவல்கள் வந்துள்ளன.
ராணுவ ரேடாரில் இருந்து காணாமல் போனதால், மேற்கொண்டு விமானத்துக்கு என்ன ஆனது என்பதைப்
பற்றிய தகவல் உறுதியாகத் தெரியவில்லை. மாயமான விமானத்தைத் தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.