Show all

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 2வது ரேங்க் வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) 10வது ரேங்க் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) மோதினார். 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார் ஸ்வெரவ். இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடி ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த அவர் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.

 

ஆண்கள் டென்னிசில் 20 வயது இளம் வீரரான ஸ்வெரவ் வெல்லும் முதல் ஏடிபி மாஸ்டர்ஸ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.