Show all

2000ரூபாய் தாள்களுக்கு என்ன கதி நேரக்கூடும்! குழப்பத்தில் மக்கள்

08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சும்மாக் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்ற பழமொழிக் கேற்ப, மோடி அரசின் ரூபாய்தாள் செல்லாது அறிவிப்பைத் தொடர்ந்து பற்பல வதந்திகள் பரவிக் கொண்டேதாம் இருக்கின்றன. மக்களும், பணம் கையாளத் தேவையிருக்கிற அனைத்து நிறுவனங்களும் அல்லாடிக் கொண்டுதாம் இருக்கின்றனர் ஒவ்வொரு நாளும் புதுப் புதுக் கோணங்களில்!

பத்து ரூபாய் நாணயங்கள் செல்லுமா செல்லாதா என்கிற குழப்பத்திற்கே இன்னும் நிலையான முடிவு கிட்டாத நிலையில் புதியதாக வெளியிட்ட 2000 ரூபாய் கழுவில் ஏற்றப் பட்டிருக்கிறது. நாணயங்களும் ரூபாய்தாள்களும் தனிமனிதனின், அவன் உழைத்த உழைப்பிற்கான ஆதாயம் மட்டுமல்ல அந்தத் தனிமனிதனின் வல்லமை மிக்க அதிகாரமும் அதுதான்.

எந்த மனிதனை வேண்டுமானாலும் அதை வைத்துக் கொண்டு ஆட்டிப் படைக்க முடியும். அதைக் கழுவில் ஏற்றிவிட்டு நம்மின் அடிமை அடையாளமான ஆதார் அட்டையைத், ‘தனிமனிதனின் அதிகாரம்’ என்று மக்கள் காதில் பூச் சுற்றி;க் கொண்டிருக்கிறது, மோடி அரசு. ஆமாம் இரண்டு வௌ;ளைக் காக்காய் பறக்கின்றன என்று ஊடகங்களும் சால்ரா போட்டுக் கொண்டு இருக்கின்றன.

புதியதாக 500, 2,000, 200 ரூபாய்தாள்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி கூடுதல் நிலை ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது:

மக்களவையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தின்படி, ரூபாய்தாள் செல்லாது அறிவிப்பு வரை- சிறிய மதிப்பிலான ரூபாய் தாள்கள் 3.5 லட்சம் இருந்தன. 13.32 லட்சம் கோடி உயர் மதிப்பு ரூபாய்தாள்கள் இருந்தன.

புதிதாக 1,695 கோடி 500 ரூபாய்தாள்கள், 365 கோடி 2000 ரூபாய்தாள்கள் அச்சிடப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 15.78 லட்சம் கோடி.

இவற்றில் புழக்கத்தில் விட்டது போக, 2.46 லட்சம் கோடி உயர் மதிப்பு ரூபாய்தாள்கள் ரிசர்வ் வங்கியிடம் உள்ளன. இது இன்னமும் புழக்கத்தில் விடப்படவில்லை என்பது புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.

சில்லரை பரிவர்த்தனையில் 2,000 ரூபாய்தாள் பெரும் சவாலாக உள்ளன. எனவே, 2000ரூபாய்தாள்கள் அச்சிடுவதை நிறுத்தவோ, அல்லது கையில் இருப்பு வைத்துள்ளதை புழக்கத்தை விடாமல் நிறுத்தி வைக்கவோ ரிசர்வ் வங்கி முயலலாம். தற்போது உள்ள மொத்த பண புழக்கத்தில், சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டு மதிப்பு 35 விழுக்காடக மட்டுமே உள்ளது என கூறப்பட்டுளள்து.

இதனால் 2000ரூபாய் தாள்களுக்கு என்ன கதி நேரக்கூடும் என்று இன்னும் யாரலும் கணிக்க முடியாமல் இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,645

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.