Show all

உரிய நீரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து பெற்றுத் தந்தே தீருவோம்: அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உரிய நீரை தமிழகத்திற்கு காவிரியில் இருந்து பெற்றுத் தருவோம் என்று உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்த வழக்கில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு, 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும், அறங்கூற்று மன்ற உத்தரவை செயல்படுத்த ஒரு திட்டத்தை நடுவண் அரசு உருவாக்க வேண்டும். 6 வாரங்களுக்குள், காவிரி தீர்ப்பை அமல்படுத்த திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் ஆறு கிழமைகள் கடந்தும், உரிய நடவடிக்கை எடுக்காத மோடி அரசு மீது தமிழகம் சார்பில், அறங்கூற்று மன்ற அவமதிப்பு வழக்கு உச்ச அறங்கூற்று மன்றத்தில், தொடரப்பட்டது. இன்று தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா அமர்வு முன்னிலையில், வழக்கு பரிசீலனைக்கு வந்தது. அப்போது தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா கூறுகையில், உச்ச அறங்கூற்று மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வகை செய்வோம். தமிழக உழவர்களின் கவலை எங்களுக்கும் தெரியும். காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை நீதிமன்றம் பெற்று தந்தே தீரும் என்று தெரிவித்தார்.

நடுவண் அரசு எதுவும் முயற்;சித்து அறங்கூற்றுமன்றத்தை அந்தர் பல்டி அடிக்கச் செய்யாமல் இருந்தால் சரியே! ஏனென்றால் சட்டத்திற்கான நிறுவனமே நடுவண் அரசுதான். அதுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,745.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.