Show all

உத்தரப் பிரதேச மாநிலம் பரிசு! கரும்பு உற்பத்தியை அதிகரித்தால் சர்க்கரை நோய் அதிகரிக்கும், எனும் இந்த விடைக்கு

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  உத்தரபிரதேச மாநிலம் பக்பட் மாவட்டத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசிய கருத்து உழவர்கள் மத்தியில் விமர்சனமாகியுள்ளது. 

யோகியின், 'கரும்பு உற்பத்தியில் கவனம் செலுத்தும் உழவர்கள், மற்ற பயிர்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதிக அளவில் கரும்பு உற்பத்தியைச் செய்து வருகிறோம். கரும்பு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், சர்க்கரை நோயை அதிகரிக்க வித்திடுகிறோம். அதனால், உழவர்கள் கரும்பு உற்பத்தியைத் தவிர்த்து மற்ற பயிர் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்' 

பாஜககாரர்கள் அறிவாளியாகவே பிறக்கிறார்களா? பாஜகவில் சேர்ந்த பிறகு அறிவாளியாகிறார்களா என்ற பட்டிமன்றம் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,909.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.