Show all

இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம் தமிழ்நாடு! இந்தியாவின் இரண்டு பெரிய பணக்காரர்களின் மாநிலம் குஜராத்

தமிழ்நாட்டின் தற்போதைய உள்நாட்டு உற்பத்தி 24.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியான 135 இலட்சம் கோடியில் தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தி 18.4 விழுக்காடு ஆகும். அதாவது இருபத்தி எட்டு மாநிலங்களும், எட்டு ஒன்றிய ஆட்சிப் பகுதிகளும் உள்ள இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கை தமிழ்நாடு வழங்குகிறது. 

03,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவின் 2வது மிகப்பெரிய பணக்கார மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் 50 விழுக்காட்டு மக்கள் நகரப்பகுதிகளில் வசிக்கின்றனர். தமிழ்நாட்டின் தற்போதைய உள்நாட்டு உற்பத்தி 24.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியான 135 இலட்சம் கோடியில் தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தி 18.4 விழுக்காடு ஆகும் 

அதாவது இருபத்தி எட்டு மாநிலங்களும், எட்டு ஒன்றிய ஆட்சிப் பகுதிகளும் உள்ள இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கை தமிழ்நாடு வழங்குகிறது. 

தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 45 விழுக்காடு சேவைத் துறையும், 34 விழுக்காடு உற்பத்தித் துறையும், 21 விழுக்காடு வேளாண் துறையும் பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் மற்றும் வாகன பாகங்கள், பொறியியல், மருந்துகள், ஆடைகள், துகில் பொருட்கள், தோல் பொருட்கள், வேதியியல் வணிகங்கள் முதன்மைத் திறனாக உள்ளன.   

இந்தியாவின் முதல் பணக்கார மாநிலம் எது என்றால் அது மகாராஷ்டிரா தான். அதன் தலைநகரம் மும்பை இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக உள்ளது. 

மகாராஷ்டிராவின் உள்நாட்டு உற்பத்தி 35.81 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மகாராஷ்டிராவின் மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினர் நகரப்பகுதிகளில் வசிக்கின்றனர். உற்பத்தி, பன்னாட்டு வணிகம், பொதுமக்கள் ஊடகம், விண்வெளி, தொழில்நுட்பம், பெட்ரோலியம், ஒப்பனை, ஆடை மற்றும் சுற்றுலா போன்ற துறைகள் மகாராஷ்டிராவின் திறன் ஆகும். மகாராஷ்டிராவின் வருவாயில் வேளாண்மை 51 விழுக்காடு, தொழில்துறை 9 விழுக்காடு, சேவைகள் துறை 40 விழுக்காடு பங்கு வகிக்கிறது. 

அம்பானி, அதானி என்கிற இந்தியாவின் இரு பெரும் பணக்காரர்கள், இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்சா ஆகியோரின் மாநிலமான குஜராத்தின் உள்நாட்டு உற்பத்தி 22 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. 

இந்த மாநிலத்தின் முதன்மை உற்பத்தி வேளாண்மை மற்றும் தொழில்துறை. புகையிலை, பருத்தி ஆடைகள் மற்றும் பாதாம் உற்பத்தியில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு குஜராத்தில் தயாரிக்கப்படுகிறது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மை 18 விழுக்காடு, தொழில்துறை 45 விழுக்காடு, சேவைகள் துறையில் 36 விழுக்காடு ஆகும். 

கர்நாடகாவின் உள்நாட்டு உற்பத்தி 18.66 லட்சம் ரூபாயாக உள்ளது. இந்தியாவின் சிலிகான்வேலியாக கர்நாடாவின் தலைநகரம் பெங்களூரு உருவாகியுள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ், இந்திய டெலிபோன் இண்டஸ்ட்ரி உள்நாட்டின் முக்கிய நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன. 

உள்நாட்டு உற்பத்தியில், தகவல்தொழில் நுட்பம், வேளாண்மை, விண்வெளி, துகில் மற்றும் ஆடை, உயிரி தொழில்நுட்பம் மற்றும் கனரக பொறியியல் தொழில்கள் முதன்மைப் பங்குவகிக்கின்றன. 

மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையில் 64 விழுக்காடும், வேளாண் துறை 10 விழுக்காடு, தொழில்துறை 26 விழுக்காடு. 

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக அமைந்துவிட்ட உத்திரப் பிரதேசத்தின் உள்நாட்டு உற்பத்தி 15.80 கோடி ரூபாய். கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் வேளாண்மை ஆகியவை மாநில மக்களுக்கு வருமானம் அளிக்கின்றன. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையில் 50 விழுக்காடு, வேளாண் துறை 24 விழுக்காடு, தொழில்துறை 26 விழுக்காடு பங்கு வகிக்கின்றன. 

மேற்கு வங்கத்தின் உள்நாட்டு உற்பத்தி 13.14 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வேளாண்மை மற்றும் நடுத்தர தொழில் மேற்கு வங்கத்தின் பொருளாதாரத்துக்கு முதன்மைப் பங்குவகிக்கின்றன. 

மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையில் 53 விழுக்காடு, வேளாண் துறை 21 விழுக்காடு, தொழில்துறை 26 விழுக்காடு ஆகும். 

ராஜஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.21 லட்சம் கோடி ரூபாய். இது கனிம வளம் நிறைந்த மாநிலம். இங்கு பொருளாதாரம் வேளாண்மை, சுரங்கம் மற்றும் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டது. மாநிலத்தில் தங்கம், வெள்ளி, மணற்கல், சுண்ணாம்பு, பளிங்கு, ராக் பாஸ்பேட், தாமிரம் மற்றும் லிக்னைட் படிவுகள் உள்ளன. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய பைஞ்சுதை (சிமெண்ட்) உற்பத்தி செய்யும் மாநிலமாகும். ராஜஸ்தான் அதன் வரலாற்றுப் பாரம்பரியம் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முதன்மை மையமாக உள்ளது. 

மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையில் 47 விழுக்காடு, வேளாண் துறை 44 விழுக்காடு, தொழில்துறை 8 விழுக்காடு ஆகும்;.

ஆந்திர பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.73 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இங்கு 62 விழுக்காட்டு மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேளாண்மையுடன் இணைந்துள்ளனர். தொழில் தொடங்குவதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் ஆந்திர பிரதேசம் என உலக வங்கி வர்ணித்துள்ளது. 

இந்த மாநிலம் இந்தியாவில் 70 விழுக்காடு, இறால் உற்பத்தி செய்கிறது. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையில் 47 விழுக்காடு, வேளாண் துறை 44 விழுக்காடு, தொழில்துறை 8 விழுக்காடு ஆகும்.

தெலுங்கானாவின் உள்நாட்டு உற்பத்தி 10.49 லட்சம் கோடி ரூபாய். இங்கு இரண்டு பெரிய ஆறுகளான கிருஷ்ணா மற்றும் கோதாவரி உள்ளதால், அதிக அளவில் பாசன வசதி உள்ளது. தகவல் தொழில் நுட்பச் சேவைகள் மற்றும் உயிரி தொழில்;நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. 

மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் சேவை துறையில் 26 விழுக்காடு, வேளாண் துறை 55 விழுக்காடு, தொழில்துறை 17 விழுக்காடு ஆகும்.

மத்திய பிரதேசத்தின் உள்நாட்டு உற்பத்தி 11.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. நாட்டிலேயே வைரம் உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் இதுதான். மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி சேவை துறையில் 37 விழுக்காடு, வேளாண் துறை 62 சதவீதம், தொழில்துறை 5 விழுக்காடு ஆகும்.

கேரளாவின் உள்நாட்டு உற்பத்தி 8.76 லட்சம் கோடி ரூபாய். இந்த மாநிலத்தின் பொருளாதாரத்துக்கு முதன்மை வருவாய் சேவை துறையிலிருந்துதான் கிடைக்கிறது. கேரளாவில் 85 விழுக்காடு, இயற்கை ரப்பரும், 97 விழுக்காடு, கருப்பு மிளகும் உற்பத்தி செய்யப்படுகிறது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறை 10 விழுக்காடு, பங்களிப்பை வழங்குகிறது. 

மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி சேவை துறையில் 63 விழுக்காடு, வேளாண் துறை 8 விழுக்காடு, தொழில்துறை 28 விழுக்காடு, பங்கு வகிக்கின்றன.

டெல்லியில் உள்நாட்டு உற்பத்தி 7.98 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மக்கள் வேலை செய்வதற்கு டெல்லி முதல் தேர்வாக உள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக டெல்லி வருகின்றனர். நாட்டின் தலைநகரான டெல்லி பல நிறுவன தலைமையகங்களைக் கொண்டுள்ளது. 

இந்தியாவின் பணக்கார மாநிலங்கள் பட்டியலில் டெல்லி 12வது இடத்தில்தான் உள்ளது. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி சேவை துறையில் 86 விழுக்காடு, வேளாண் துறை 2 விழுக்காடு, தொழில்துறை 12 விழுக்காடு என பங்கு வகிக்கின்றன.
தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,251.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.