Show all

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழித்தவர்கள் நாட்டைக் கெடுப்பதுடன் தானும் கெட்டார்

நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்கள் தூங்கும் புகைப்படங்களை நாம் இணையத்தில் பார்த்திருப்போம். ராகுல் காந்தி இதற்கு முன்னரும் நாடாளுமன்றத்தில் தூங்கும் புகைப்படம் இணையத்தில் வெளிவந்தது உண்டு. ஆனால் இன்று நாடாளுமன்றத்தில், முக்கிய விவாதத்தின் போது ராகுல் காந்து தூங்கியது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. குஜராத்தில் மாட்டை தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை இன்று காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்டது. ஆனால் இந்த அமளிக்கு மத்தியிலும் ராகுல் காந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.