Show all

மோடிக்கு! சத்ருகன் சின்ஹா காட்டமான அறிவுரை

25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரஸ் கட்சி குஜராத் தேர்தலில் வெற்றி பெற பாகிஸ்தானுடன் கூட்டுச்சதியில் ஈடுபடுவதாக,

மோடி தன் கருத்துப் பரப்புதலில் வைத்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பாகிஸ்தானுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்புப்படுத்தி ஒட்டுமொத்த அரசியல் வெளிக்கு மதச்சாயம் பூசாதீர்கள் என பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. சத்ருகன் சின்ஹா அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று தனது கீச்சு பக்கத்தில் அடுத்தடுத்து பதிவிட்டுள்ள சத்ருகன் சின்ஹா,

மதிப்பிற்குரிய ஐயா! எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதுவும் இறுதிக்கட்டத்தில் அரசியல் எதிர்ப்பாளர்கள் மீது ஆதாரமில்லாத, நம்ப முடியாத புதுப்புது கதைகளை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

புதிய திருப்பங்கள், கதைகள், பூசி மெழுகுதல் ஆகியவற்றை கைவிட்டு, நாம் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளான வீட்டு வசதி திட்டம், முன்னேற்றம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, ஆரோக்கியம் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

எனவே, அரசியல் வெளிக்கு மதச்சாயம் பூசுவதை நாம் நிறுத்திவிட்டு ஆரோக்கியமான அரசியல் மற்றும் ஆரோக்கியமான தேர்தல்களின் பக்கம் நாம் திரும்ப வேண்டும்.’

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,633

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.