Show all

அன்னஹசாரே விருப்பத்திற்கு ஒட்டு மொத்த இந்தியாவை ஆள அப்துல்காலாம் போன்ற தமிழர் வந்தால் தான் உண்டு.

27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரசுக்கு தலைவலியாய் இருந்து, பாஜகவின் ஆட்சிக்கு ஒருவிதத்தில் காரணமாய் அமைந்து விட்ட அன்னா ஹசாரே- பாஜக மோடியின் ஆளுமையில் முடங்கியே போய் விட்டார்.

மெல்ல ஆசுவாசம் அடைந்தவராக அன்னா ஹசாரே டில்லியில், 09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அன்று (23.03.2018) மிகப் பெரிய போராட்டம் ஒன்றை நடத்த உள்ளேன் என்று அறிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் வேளாண்பெருமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஜன்லோக்பால் மசோதாவை கொண்டு வர காங்கிரஸ் அரசு தவறி விட்டது.

அதன் பின்னர் மோடி ஜன்லோக்பால் மசோதாவை நீர்த்து போக செய்து புதைத்தே விட்டார். இந்த விசயத்தில் காங்சிரஸ் - பாஜக இருவரும் குற்றவாளிகள் தாம். மோடியும் வேண்டாம். ராகுலும் வேண்டாம். விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றும் அரசு தான் எங்களுக்கு தேவை என்றார்.

அதற்காக, எனது இந்த போராட்டத்தின் மூலம் வெறுமனே தலைநகரை மட்டும் ஆளும்

மற்றொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் என நம்புகிறேன் என்றார்.

அன்னஹசாரே விருப்பத்தை நிறைவு செய்ய, ஒட்டு மொத்த இந்தியாவை ஆள அப்துல்காலாம் போன்ற தமிழர் வந்தால் தான் உண்டு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,635

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.