Show all

வந்துவிட்டது ஆப்பு! என்னுடைய செல்பேசி எண்ணை நான் மாற்றிக் கொண்டதே இல்லையெனும் பெருமைக்கும்

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: என்னுடைய செல்பேசி எண்ணை நான் மாற்றிக் கொண்டதே இல்லை. நான் அவ்வளவு நேர்மையானவன் என்று இனி யாரும் பெருமைபட்டுக் கொள்ள முடியாது. நம்முடைய மரபை ஊத்தி மூடுவதற்கென்றேதான் மோடியை தேடிப் பிடித்து ஆட்சியைக் கையில் கொடுத்திருக்கிறோமே. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிக்கு ஆப்பு வைக்கிற மேடி, அஞ்சறைப் பெட்டி சேமிப்புக்கு ஆப்பு வைத்த மோடி, தமிழ் மொழி, தமிழர் பண்பாட்டு அடையாளத்திற்கு ஆப்பு வைக்கிற மோடி, மானியங்களுக்கு ஆப்பு வைக்கிற மோடி, தமிழர் மருத்துவக் கல்விக்கு ஆப்பு வைக்கிற மோடி, வேளாண் நிலங்களில் எரிவாயு குழாய் பதித்து தமிழர் வேளாண்மைக்கு ஆப்பு வைக்கிற மோடி, அத்து மீறும் சிங்கள அரசைத் தட்டிக் கேட்க மனமில்லாமல், மீன் பிடிக்கிற உரிமைக்கு ஆப்பு அடிக்கிற மோடி. இப்போது, ஒரே செல்பேசி எண்ணை பயன்படுத்தும் சாதாரண அற்ப மகிழ்ச்சிக்கும் வந்து விட்டது மோடியின் ஆப்பு! 

வரும் 17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 முதல் (01.07.2018) 13 இலக்க செல்பேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்க எண்களை வழங்கும்படி அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களையும், தொலை தொடர்புத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி, புதிதாக செல்பேசி எண் வாங்குவோருக்கு இனி 13 இலக்க எண்கள் வழங்கப்படும். தற்போது 10 இலக்க எண்கள் பயன்படுத்துவோர் 13 இலக்க எண்களுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். 13 இலக்க எண்ணாக மாற்றுவதற்கான காலக்கெடுவும் உண்டு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,705 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.