Show all

கமல் அறிவிப்பு! கட்சி, மக்கள் நீதி மய்யம். கொடி, ஆறு கைகள் இணைந்த வெள்ளை நிறக் கொடி

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கட்சிப் பெயர் அறிவிப்புக்குப் பிறகு கமல் பேச்சு

இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல என்று கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று ராமேசுவரத்தில் இருந்து தொடங்கியுள்ளார். மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுடன் கமல் வருகை தந்தார்.

ஆறு  கைகள் இணைந்த வெள்ளை  நிறக் கொடியை ஏற்றிய கமல்ஹாசன் தன் கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார். அதற்குப் பிறகு மேடையில் பேசிய கமல், இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல. கட்சிக்கு ‘மக்கள் நீதி மய்யம்’ என பெயரிட்டுள்ளோம். இனி தோழர்கள் கட்சிப் பெயரை சொல்லி சொல்லிப் பழகுங்கள்.

நான் உங்கள் கருவி, உங்கள் தலைவன் அல்ல. நாம் சமைக்க இருக்கும் மக்களாட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,705 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.