Show all

மானிய சமையல் எரிவாயு உருளையும் விலை உயர்த்தப் பட்டது

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசின் மானியத்துடன் கூடிய 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை விலை இன்று முதல் ரூ 4.50 உயர்ந்து ரூ.495.65 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ. 742 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலிண்டருக்கு ரூ.93 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் 18.11 கோடி பேர் மானிய சமையல் எரிவாயு உருளைகள் பயன்படுத்தி வருகின்றனர். 2,66 கோடி பேர் மானியமில்லா சமையல் எரிவாயு உருளைகளையும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.