Show all

வீட்டுச் சமையல் எரிவாயு உருளை விலை, 14.50 ரூபாய் உயர்வு

சென்னையில், சமையல் எரிவாயு உருளை விலை, 14.50 ரூபாய் உயர்ந்து உள்ளது. இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20கிலோ, உணவகம் உள்ளிட்ட வணிக பயன்பாடுகளுக்கு, 19 கிலோ எடை உடைய, சமையல் எரிவாயு உருளைகளை விநியோகித்து வருகின்றன.

     அனைத்;து நாட்டுச் சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும், எரிவாயு உருளை விலை மாற்றப்படுகிறது. அதன்படி, சென்னையில் சூனில், 559.50 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு எரிவாயு உருளை விலை, தற்போது, 14.50 ரூபாய் உயர்ந்து, 574 ரூபாயாக அதிகரித்துள்ளது.

     இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: வீட்டு எரிவாயு உருளைக்கு, கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி கிடையாது.

     சரக்கு மற்றும் சேவை வரியில் வீட்டு எரிவாயு உருளைக்கு, 5விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரி விதிப்பு முறை, இன்று முதல் அமலுக்கு வந்ததால், வீட்டு எரிவாயு உருளை விலை உயர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.