Show all

பிரதமர் மோடி சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது பூச்சாடி வீசிய பெண்

பிரதமர் மோடி சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது பூச்சாடி வீசிய பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைநகர் புதுடெல்லியில், பலத்த பாதுகாப்பிற்கு இடையே சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பு படை வாகனத்தின் மீது பெண் ஒருவர் பூச்சாடியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் பிரதமரின் பாதுகாப்புப் படை, டெல்லி விஜய் சௌக் பாதை வழியாக கடந்து சென்ற போது நடைபெற்றது. பூச்சாடியானது வாகனத்தின் மீது படாமல் சாலையில் விழுந்ததால் சேதம் எதுவுமில்லை.

பிரதமர் செல்லும் பாதையை விட்டு விலக அந்த பெண்மணி மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் டெல்லி காவல்துறையினரால் அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, அந்தப் பெண்மணியைப் பாராளுமன்ற வீதிக்கு கொண்டு சென்ற காவல்துறையினர், எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.  முன்னதாக பிரதமர் மோடியை தான் பார்க்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.