நாட்டின் 67வது
குடியரசு நாள் விழா இன்று கொண்டாடப்படுறது. இதனையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்தக் குடியரசு
நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே கலந்து கொள்கிறார். குடியரசு
நாள் விழாவை சீர்குலைக்கும் வகையில் சில பகுதிகளில்
தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, டெல்லியில்
உள்ள பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
முப்படை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள ராஜபாதை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
நகர போலீஸார் மட்டுமின்றி ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்புப்
பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்திரா காந்தி விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.