Show all

வாழும்கலை அமைப்பு அயோத்தி பிரச்சனைக்கு தீர்வுகாண முயல்கிறதாம்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பெங்களூரை தலைமையிடமாக வைத்து, வாழும் கலைஎன்ற அமைப்பை, ரவிசங்கர் நடத்தி வருகிறார்.

     வாழும் கலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண, ஏற்ற சூழ்நிலை நிலவுவதை, பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, ரவிசங்கர் விரும்புகிறார்.

     இரு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்றாக பேசி, பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, விரும்புகிறார். இது தொடர்பாக, துறவியர் மற்றும் இமாம்களுடன், ரவிசங்கர் பேசி வருகிறார். எந்த அரசின் சார்பாகவோ, அமைப்பின் சார்பாகவோ, இந்த பேச்சை, அவர் நடத்தவில்லை. அறங்கூற்று மன்றத்துக்கு வெளியே, இந்த பிரச்னைக்குச் சுமுக தீர்வு காண, முயற்சித்து வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.