Show all

சத்தீஸ்கரில் கறுப்புநாள் அனுசரிக்கும் தொடர்ஓட்ட நிகழ்வு

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நரேந்திர மோடி தலைமையிலான நடுவண் அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகையைத் தொடங்கி ஆங்கிலத் தேதிப்படி இன்றுடன் ஓராண்டு முடிவடைவதையொட்டி, எதிர்க்கட்சிகள் இந்த நாளை கறுப்பு நாளாக அனுசரித்துவருகின்றனர்.

சத்தீஸ்கரில் இன்று, கறுப்புநாள் தொடர் ஓட்டத்தை நடத்தியது காங்கிரஸ். ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு மோடி அரசின் மக்களாட்சிக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான மன உணர்வை வெளிப்படுத்தினர்.

இன்று, பல்வேறு இடங்களில் இதைப் போன்ற போராட்டங்கள் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,600

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.