Show all

தலைமைஅமைச்சர் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு! வருத்தமான உண்மை இந்தியாவின்தலைவர் ஒருதிருடன் என்று கீச்சுப்பதிவு

08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்று உள்ளதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெளிக் கொணர்ந்து வருகிறது. ஆனால் தலைமை அமைச்சர் மோடி இதுகுறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. 

அண்மையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே, ரபேல் ஒப்பந்தத்தை, இந்திய அரசு தான் அனில் அம்பானி நிறுவனமான ரிலையன்சுடன் ஒப்பந்தம் செய்ய சொன்னது எனக் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தினார். 

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சாய்ஸ் ஹாலாண்டே கூறிய கணொளியைப் பகிர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது கீச்சுப் பக்கத்தில், இந்திய தலைமைஅமைச்சர் மோடியை- வருத்தமான உண்மை இந்தியாவின் தலைவர் ஒரு திருடன் என்று கூறி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,920.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.