Show all

ராகுல் காந்தி பெருமிதம்! காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாநிலங்களிலும் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதில்

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாநிலங்களிலும் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பெருமிதம் கொண்டுள்ளார்.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கரைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ராஜஸ்தான் மாநிலத்திலும் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியை மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில புதிய அரசுகள் நிறைவேற்றின.

5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களுக்குள் வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அதன் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி ஆட்சிப்பொறுப்பேற்ற 3 மாநிலங்களிலும் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தாங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கீச்சுவில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,007.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.