Show all

சமூக ஊடக போரில், மோடியை வென்று அசத்திய, ராகுல் காந்தி!

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  நடப்பு ஆண்டு கீச்சில் அதிகம் தீயான அரசியல் தலைவர், மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட நபர் யார், ராகுல் காந்தியா, மோடியா என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

இவர்கள் கடந்த கீச்சுவில் செயல்பட்ட விதத்தை வைத்தும், மக்கள் அவர்களின் கீச்சுகளுக்கு கொடுத்த பதில்களை வைத்தும் இந்த விவரம் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தலைமைஅமைச்சர் மோடி என இரண்டு அரசியல் தலைவர்களும் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் கீச்;சுவில் ராகுலை விட மோடி அதிக நேரம் செலவழித்து அதிக கீச்சுகளைப் பதிவிடுகிறார். ஆனால் குறைவான கீச்சு செய்தும், குறைவான பின்தொடர்பாளர்களை கொண்டும் கூட ராகுல் காந்திதான் கீச்சுவில் தீயாக இருந்துள்ளார். ராகுல் காந்தியின் கீச்சுகள்;தாம் அதிகமாக பகிர்வு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் கீச்சு;கள் சராசரியாக 8000 முறைகள் பகிர்வுகள் செய்யப்பட்டுள்ளன. மோடியின் கீச்சுகள் சராசரியாக 3000 முறைகள் மட்டுமே பகிர்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ராகுலின் கீச்சுவிற்கு சராசரியாக 3000 பதில்கள் வருகின்றன. மோடியின் கீச்சுகளுக்கு சராசரியாக 600 பதில்களே வருகின்றன.

அதேபோல் ராகுலின் கீச்சுவிற்கு சராசரியாக 25000 பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள். மோடியின் கீச்சுகளுக்கு சராசரியாக 15000 பேர் விருப்பம் தெரிவிக்கிறார்கள். இந்த மூன்றிலும் ராகுல்தான் முன்னிலை வகிக்கிறார்.

ஆனால் கடந்த அண்டில் மோடி அனைத்திலும் ராகுலை விட முன்னிலையில் இருந்தார். ஒரே ஆண்;டில் ராகுல் அவரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறார். தலையாயத்துவமாக காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்ற ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய மாற்றமும் நிகழ்ந்து உள்ளது.

ராகுல் காந்தி அதிகமாக வேளாண்மை, வேலை வாய்ப்பு, மோடி குறித்து பேசியுள்ளார். ராகுல் காந்தி 46 கிச்சுவில் 1 கீச்சு வேலைவாய்ப்பு குறித்தும், 17 கீச்சுவில் 1 கீச்சு வேளாண்மை குறித்தும், 13 கீச்;சில் 1 கீச்சு மோடி குறித்தும் பேசியுள்ளார்.

மாறாக மோடி 462 கீச்சுவில் 1 கீச்சு மட்டுமே வேலைவாய்ப்பு குறித்து எழுதுகிறார். 33 கீச்;சுவில் 1 கீச்சு மட்டுமே வேளாண்மை குறித்து எழுதுகிறார். ஆனால் 33 டிவிட்டில் 1 கீச்சில் தன்னை பற்றி எழுதுகிறார்.

இந்த ஆண்;டு முழுக்க ராகுல் காந்திதான் கீச்சுவில் தீயாக  இருந்துள்ளார். கடந்த ஆண்டில் மோடி வகித்த இடத்தை இந்த ஆண்டு ராகுல் பிடித்து விட்டார்.

அதேபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தான் மோடி அதிகமாக கீச்சு செய்துள்ளார். மாதம் 300-400 கீச்சுகள் செய்துள்ளார் மோடி. ஆனால் ராகுல்,  மாதம் 60-100 கீச்சுகள் வரை மட்டுமே செய்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,006.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.