Show all

பெற்றோர்கள் தும்பைவிட்டு வாலைப் பிடிக்க, தற்கொலை முயற்சியில் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமி

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு உட்பட்ட அவாத்பூரி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 16அகவை சிறுமி ஒருவர் அடிக்கடி செல்பேசியில் பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதை அவரது தாய் கண்டித்தும் அந்த சிறுமி தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த தாய், சிறுமியின் செல்பேசியைப் பிடுங்கி அதிலிருந்த செறிவட்டையை எடுத்து உடைத்து போட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த அந்தச் சிறுமி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதையடுத்து தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அந்த கடிதத்தில் ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை. இந்த கடிதத்தை நீங்கள் படிக்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன். தங்கச்சியை இந்தியக் காவல்துறை ஆட்சிப்;பணிக்கு படிக்க வையுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். பின் போபாலில் இருந்து எதோ தொடர்வண்டி பிடித்து 1400 கி.மீ. வரை சென்றுள்ளார்.

இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. 24 மணி நேரமாக அந்த சிறுமியை தேடி இருக்கிறார்கள். ஆனால் அந்த சிறுமி குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அந்த சிறுமி பேசியில் அழைத்துள்ளார்.

தொடர்வண்டியில் ஒருவரிடம் பேசியை வாங்கி அந்தச் சிறுமி பயமாக இருக்கிறது என்று புலம்பி உள்ளார். அப்போதுதான் அவள் 1,400 கிமீ தூரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்தச் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியிலும், அந்த சிறுமியின் பள்ளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.