Show all

ஏர்டெல்லும் தரப்போறாங்கலாம் தீபாவளிக்கு மலிவுவிலை மிடுக்குசெல்பேசி

நம் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் தீபாவளி முதல் குறைந்த விலைக்கு 4ஜி மிடுக்குசெல்பேசிகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வருகையை யடுத்து தொலைத்தொடர்பு சார்ந்த போட்டிகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஜியோவின் சலுகைகளை எதிர்கொள்ளவும், சந்தையில் தனது நிலைப்பாட்டை தக்கவைத்துக்கொள்ளவும் ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி ஜியோ பேசி அறிமுகத்தைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் அதேபோல மலிவு மிடுக்குசெல்பேசி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் புதிய மலிவு விலை 4ஜி மிடுக்குசெல்பேசிகள் 2,500 ரூபாய் முதல் 2,700 ரூபாய்க்குள் தீபாவளி திருநாள் சமயத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் இந்த 4ஜி மிடுக்குசெல்பேசி; இரட்டை செறிவட்டை வசதி, 4 அங்குல தொடுதிரை, முன் மற்றும் பின்புற படக்கருவிகள், 1ஜிபி ரேம் எனக் குறிப்பிட்ட சில சிறப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஏர்டெல் நிறுவனம் 4ஜி மிடுக்குசெல்பேசி; வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.