Show all

எந்த ஒளிக்கீற்றும் தென்படவில்லை! நீட் இருளை கிழித்து தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உரிமைக்கு ஒளியேற்றும் வகைக்கு

ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், நீட் இருளை கிழித்து தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உரிமைக்கு ஒளியேற்றும் வகைக்கு எந்த ஒளிக்கீற்றும் தென்படவில்லை. ஆனால் தேர்வறைச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

22,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா முழுவதும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், நீட் இருளை கிழித்து தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உரிமைக்கு ஒளியேற்றும் வகைக்கு எந்த ஒளிக்கீற்றும் தென்படவில்லை. ஆனால் தேர்வறைச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. 

நீட் நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில்  தேர்வுக்கு இந்தியா முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளளனர். தேர்வு தொடர்பாக உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பல்வேறு முறையீடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் அந்த மனுக்களை உச்ச அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது.  இதன் மூலம் திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடை பெறுவது உறுதியானது. 

இதற்கிடையே தேர்வுக்கான தேர்வறைச் சீட்டுக்களை ஒன்றியத் தேர்வு முகமை,  இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த நாளைப் பதிவு செய்து தேர்வறைச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு ஒன்னரை லட்சம் பேர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,70,999.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.