Show all

இருமாநிலத் தேர்தல்களால் மோடி வெளிநாட்டுச் சுற்றுலா செல்லமாட்டார்

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத், ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பிரதமர் மோடி அடுத்த 40 நாட்களுக்கு இந்தியாவுள்ளாகவே இருப்பார் என கூறப்படுகிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23,28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 (09,14.12.2017) என இரண்டு கட்டங்களாகவும், ஹிமாச்சலப் பிரதேசத் தேர்தல் 23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119 (09,12.2017)ம் நடைபெறவுள்ளன. குஜராத் தேர்தல் பாஜகவுக்கு வாழ்வா? சாவா? என்கிற பிரச்சனை என்பதால், மோடியும், கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷாவும் விரைவில் கருத்துப் பரப்பலை தொடங்கவுள்ளனர்.

மோடி அடுத்த 40 நாட்களுக்கு கடும் பணிப்பளுவுடன் இருப்பார் என்று கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.