ராஜ்கோட்டில் தொழில்துறையினருடன் உரையாடும் போது ராகுல், ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என மோடி கூறினார். ஆனால் இத்திட்டம் மூலம் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 130 கோடி மக்கள்தொகை உள்ள நாட்டில், சில ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை என்பதே இத்திட்டத்தின் சாதனை. பாஜகவின் ஆட்சியில் உழவர்கள் கடும் வேதனையில் உள்ளனர். உழவுத் தொழில் என்ன ‘மேக் இன் அயல்நாடா’ இவ்வாறு அவர் தெரிவித்தார். ‛மேக் இன் இந்தியா மோடி! இந்தியாவில் கடிகாரம், கேமரா, ஆடைகள் என இங்குள்ள கடைகளில் சீனப் பொருட்கள் தான் கிடைக்கின்றன’ குஜராத்தில் மோடி அரசு அமைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை சீனாவில் தான் செய்தது. இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.