Show all

இந்திராவை மிஞ்சி விட்டதாக மோடி பெருமிதம்

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில தேர்தல் வெற்றிகளுக்கு பிறகு இன்று முதல் முறையாக தலைமை அமைச்சர் மோடி கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைச்; சந்தித்தார்.

டில்லியில் நடந்த பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் பேசிய மோடி, இது மிகப் பெரிய வெற்றி. தற்போது நாம் 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். இந்திரா கூட அவர் ஆட்சியின் போது 18 மாநிலங்களில் தான் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. நாம் அவரது சாதனையை மிஞ்சி விட்டோம் என்றார்.

33 ஆண்டுகளில் பாஜக கடந்து வந்த தேர்தல்களையும் அவர் நினைவு கூர்ந்தார். அதே சமயம், மாநில தேர்தல்களில் பெறும் வெற்றியில் திருப்தி அடைந்து, வரவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களை மோடி எச்சரித்துள்ளார்.

இந்திரா வெற்றிக்குப் பின்னால் சாதனைகள் இருக்கும். ஆனால் மோடிக்குப் பின்னால் அப்படி ஏதாவது இருக்க முடியுமா என்ன? இந்திராவின் சுயவேலைவாய்ப்புத் திட்டத்திற்கு இணையாக மோடி ஒட்டு மொத்த ஆட்சியிலும் தேடி சுரண்டினாலும் ஒரு பருக்கை அளவு கூட சாதனை என்று ஏதும் கிட்டாது என்பதுதாம் உண்மை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,642

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.