Show all

மோடியுடன் செல்ஃபி திட்டத்தில் ரூ.1.06 கோடி ரூபாய் நட்டம்

புது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களைக் கவரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஜகவுக்கு, இதனால் ரூ.1 கோடி நட்டம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது இளைஞர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஜக, அதற்காக, 7 கட்ட பிரசாரங்களிலும் ஈடுபட்டது. ஆங்காங்கே மோடியின் உருவப் படங்களை வைத்து அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் இந்தத் திட்டம் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. புது தில்லியில் பாஜக தோல்வியைத் தழுவியது. இதனால், ரூ.1.06 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டதாக கணக்குகள் கூறுகின்றன.

எனவேதான் இந்தத் திட்டத்தை பிகார் தேர்தலில் கொண்டு வரவில்லை என்றும், இந்தத் திட்டத்தை இத்தோடு கைவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.