12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: என் தந்தைக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் தோலை உரிப்பேன், என, பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன், தேஜ் பிரதாப் எச்சரித்து உள்ளார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவிற்கு அளிக்கப்பட்டு வந்த, 'இசட் பிளஸ்' உயர் பாதுகாப்பை, நடுவண் அரசு திரும்பப் பெற்றுள்ளது. அவரது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட, என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் திரும்பப் பெறப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக, பாட்னாவில் நேற்று, லாலுவின் மூத்த மகனும், பீகார் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப், நிருபர்களிடம் கூறியதாவது: என் தந்தையைக் கொலை செய்வதற்காக, மேற்கொள்ளப்படும் சதி வேலை இது. இதற்காக, நடுவண் அரசுக்கு தக்க பதிலடி கொடுப்போம். மோடியின் தோலை உரிப்போம். இதை, அவரிடம் போய் சொல்லுங்கள். என் தந்தை உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால், யார் பொறுப்பேற்பர்? அவர் கொல்லப்பட்டால், யார் பொறுப்பேற்பது? என் தந்தையின் உயிர் தலையாயது இல்லையா? இவ்வாறு அவர் கூறினார்.; -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,620
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.