Show all

ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டப் போவதான அடாவடியில் மீண்டும் கருநாடகம்

25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரி கருநாடகப் பகுதியாகிப் போன பிறகு, அது மேகே தாட்டு என்று கன்னடத்தில் மொழி பெயர்த்து வழங்கப் பட்டு வருகிறது.

ஆடுதாண்டும் காவிரியில், அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் அம்மாநில அனைத்துக் கட்சிகளின் பேராளர்கள் மோடியைச் சந்தித்து உள்ளனர்.

இதன் பொருட்டு மோடியைக் கர்நாடக முதல்வர் குமாரசாமி நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். ஆடுதாண்டும் காவிரி அணைகட்ட அனுமதி வேண்டும் என்று குமாரசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் ரூ.1912 கோடி ஆடுதாண்டும் காவிரி அணைக்கு திட்டம் உள்ளது என்றும் திட்ட வரைவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இதற்கு தமிழக அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இரு மாநில உறுப்பினர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்தியத் தலைமை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,906.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.