Show all

அயோத்தி வழக்கில், உச்சஅறங்கூற்றுமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

சர்ச்சைக்குரிய நிலத்தை இராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும். உச்சஅறங்கூற்றுமன்றம், அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் கோயில் கட்டலாம். இதற்காகப் புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் இந்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை இராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும். வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர இந்திய அரசு, உத்தரப்பிரதேச அரசுகளுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,331.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.