Show all

நல்ல நடவடிக்கையாகத் தான் தெரிகிறது

அரியானா மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் பெண்கள் பள்ளிகளில் 50 அகவைக்கு மேற்பட்ட ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்ற முடியும் என்றும், 50 அகவைக்கு குறைவாக உள்ள ஆண் ஆசிரியர்கள் வேறு ஆண்கள் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகார்களைத் தவிர்ப்பதற்காக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதையொட்டி, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாதம் பொது பணியிட மாற்றம் அளிக்கப்படும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.