Show all

குஜராத் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களுடன் செல்போன் ‘புளூடூத்’ கருவி இணைப்பா

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத்தில் நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் ஒப்புகைச்சீட்டு வழங்கும் எந்திரமும் அவற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தன.

வாக்குப்பதிவு நடைபெற்ற போது பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானதுடன், வாக்காளர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் பழுதடைந்த எந்திரங்களுக்கு பதிலாக மாற்று எந்திரங்கள் பொருத்தப்பட்டன.

இதற்கிடையே வாக்குப்பதிவு எந்திரங்களுடன் செல்போன் ‘புளூடூத் கருவி இணைக்கப்பட்டு இருந்ததாக போர்பந்தர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜூன் மோத்வாடியா பரபரப்பு புகார் கூறினார். சில வாக்குப்பதிவு எந்திரங்கள், செல்போன் போன்ற வெளிக்கருவிகளுடன் ‘புளூடூத் மூலம் இணைக்கப்பட்டு இருந்ததாக கூறிய அவர், அந்த கருவிகள் தொடர்பான படங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகாரும் செய்தார்.

அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகாரை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. அர்ஜூன் மோத்வாடியாவின் புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், அந்த ‘புளூடூத் கருவி பூத் ஏஜெண்டு ஒருவரின் செல்போனுக்குரியது என தெரிய வந்துள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.பி.ஸ்வைன் கூறினார்.

எப்படியிருந்தாலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பாஜக தில்லாலங்கடி இருந்ததா என்பதை தேர்தல் முடிவுதான் அம்பலப் படுத்த முடியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,632

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.