Show all

குஜராத் தோல்வி பயத்தில், காங்கிரஸ் மீது தேசவிரோத போர்வையைப் போர்த்தி அமுக்க முயலும் மோடி

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத் தேர்தல் தோல்வி பயத்தில் மோடி அவர்கள் காங்கிரஸ் மீது தேசவிரோத போர்வையைப் போர்த்தி அமுக்க முயல்கிறார்.

      குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக நரேந்திர மோடி தேர்தல் கருத்துப் பரப்புதல் கூட்டம் ஒன்றில், எதிரிகளைக் கட்டம் கட்டுவதற்கு பாஜகவின் தாரக மந்திரமான, ‘தேசத்துரோகக் குற்றச்சாட்டை காங்கிரஸ் மீது அவிழ்த்து விட்டிருக்கிறார்.

      அண்டை நாட்டுத் தலைவர்களை காங்கிரஸ் கட்சியின் முன்னணியினர் சிலர் சந்தித்தார்களாம். காங்கிரஸ் கட்சி அதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமாம்.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,632

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.