Show all

பசுவைக் கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழஉரிமை கிடையாது: ஹரிஷ் ராவத்

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதல்அமைச்சர்  ஹரிஷ் ராவத், பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழஉரிமை கிடையாது என்று கூறிஉள்ளார்.

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதல்அமைச்சர் ஹரிஷ் ராவத்,  பசு இறைச்சி, பசுவதை தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார். ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராவத் பேசுகையில், பசுவைக் கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழஉரிமை கிடையாது என்றார். பசுவைக் கொல்பவர்கள் யாராக இருந்தாலும், எந்தச்  சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி, அவர்களுக்கு நாட்டில் வாழ உரிமை கிடையாது, என்றார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில்பசுவைக் கொல்பவர்களைச்  சட்டம் பார்த்துக் கொள்ளும், பசுக்களைப்  பாதுகாக்க மாநில அரசு எதனையும் செய்யும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

தனது அரசில், பசுக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சில பரிந்துரைகளை தான் தாக்கல் செய்ததாகவும், நாட்டில் முதல்முறையாக உத்தரகாண்ட் மாநிலம் மட்டுமே பசுக்களுக்கு கொட்டகை அமைத்து, தீவணமும் வழங்கிவருகிறது என்றும் ஹரிஷ் ராவத் கூறிஉள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி என்னும் இடம் அருகே மாட்டிறைச்சியைச் சமைத்து சாப்பிட்டதாக கூறி இக்லாக் என்பவர் கிராமவாசிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இதனையடுத்து நாட்டில் சகிப்புத்தன்மையின்மை பெருகி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இவ்விவகாரம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகளுக்குக்   காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறாக உத்தரகாண்ட் மாநில முதல்அமைச்சர் ஹரிஷ் ராவத் கருத்து அமைந்து உள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.