Show all

உச்சஅறங்கூற்றுமன்றத்தில் 59 வழக்குகள்! பாஜக அரசின் குடியுரிமை திருத்த சட்டம், சட்டவிரோதம் என அறிவிக்க கோரி

பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் 59 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டம், சட்டவிரோதம் என அறிவிக்க கோரி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு பக்கம் நாடு முழுவதும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தரப்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் 59 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டம், சட்டவிரோதம் என அறிவிக்க கோரி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் அனைத்தும், உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் பாப்டே, அறங்கூற்றுவர்யகள் பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று ஒன்றாக இணைத்து விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

ஆனால்- அப்போது, பாஜக அரசின் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க அறங்கூற்றுவர்கள் மறுத்துவிட்டனர். அதேசமயம், இந்தச் சட்டம் தொடர்பாக, பாஜக அரசு- 09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121க்குள் (22.01.2020) பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையையும் அன்றைக்கே ஒத்திவைத்தனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,368.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.