Show all

பத்மாவத் படத்திற்கு எதிரான ஹிந்து வட்டாரங்கள் அடங்கின. இஸ்லாமிய அடிப்படையில் மலேசியாவில் தடை

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மலேசியாவில் பத்மாவத் படத்தை வெளியீடு செய்ய அந்நாட்டு தணிக்கை குழு தடை விதித்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடிப்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த புதன் அன்று தேதி பத்மாவத் படம் வெளியானது. வடஇந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் எழுந்த கடும் எதிர்ப்பால் பத்மாவத் படம் அங்கு வெளியாக வில்லை.

அரியானா, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்த படம் 4 நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ராஜபுத்திர அமைப்புகள் ராணி பத்மாவதியை தவறாக சித்தரிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் ஹிந்து அமைப்புகள் மற்றும் ராஜபுத்திர அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியது. ஆனால் படம் வெளியான பின்பு அதில் ராணி பத்மாவதியோ அல்லது ராஜபுத்திரர்களோ அவமதிக்கப்படவில்லை மாறாக தூக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்தது.

இதையடுத்து பல இடங்களில் போராட்டங்கள் அப்படியே அடங்கின. இந்நிலையில் பத்மாவத் படத்தை திரையிட மலேசிய அரசு தடைவிதித்துள்ளது. இஸ்லாமியர்கள் மனதை பத்மாவத் திரைப்படம் இஸ்லாமியர்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி மலேசிய அரசின் தணிக்கை குழு தடை விதித்துள்ளது.

சித்தூர் இராணி பத்மனி என்று இந்தப் படம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், வைஜெயந்தி மாலா நடித்து, சி.எச்.நாராயணமூர்த்தி இயக்கத்தில், ஆர்.எம்.ராமநாதன் தயாரிப்பில் உமா பிக்சர்ஸ் வெளியீட்டில், தமிழில், 26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5064 ல் (09.02.1963) திரைக்கு வந்தது.

சித்தூர் இராணி பத்மனி என்றாலே இந்திய மண்ணில் முஸ்லீம் மன்னர்களின் பண்பாடற்ற கொடுங்கோன்மையைத் தான் வரலாறு எடுத்துச் சொல்லும். கற்பை காத்துக் கொள்வதற்காக தன்னை மாய்த்துக் கொண்ட சித்தூர் இராணி பத்மனியை தவறாகச் சித்தரிப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஹிந்து அமைப்புகள் வைரமுத்துவை புரிந்து கொண்ட அதே கோணத்தில் தான் பத்மாவத் திரைப்படத்தைப் புரிந்து கொண்டு காட்டு மிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டது. படம் வெளியான நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் காட்டு மிராண்டிக் கூட்டம் அடங்கிக் கொண்டு வருகிறது.

புறநானூற்றில் கணவன் சிதையில் தீக்குளித்த பூதப் பாண்டியன் தேவியைக் கண்டோம். சோழ மன்னன் கிள்ளிவளவன் மனைவியர் தீப்பாய்ந்து இறந்ததைக் கோவூர்க் கிழார் பாடக் கண்டோம். சிலப்பதிகாரத்தில், மாதரி என்னும் இடைக்குலப் பெண் தீயில் பாய்ந்ததையும் தமிழர் கண்டுள்ளனர். ஆயினும் சித்தூர் ராணி பத்மினி, எழுபத்தி நான்காயிரத்து ஐநூறு பெண்களுடன் தீப்பாய்ந்ததைப் வரலாற்றில் படிக்கையில் யாருக்கும் உடம்பில் புல்லரிக்கும்.

அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது ‘மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் வரலாறு.

ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டுவந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.

அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக்க விரும்பினான். ஆகவே பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தானுக்கு வந்து சித்தூரை முற்றுகையிட்டான். சித்தூரை வெல்ல முடியாதென்று தெரிந்தது. ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, “நான் சித்தூரை வெல்ல வரவில்லை என்றும், பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும் பீம சிங்கனுக்குச் செய்தி அனுப்பினான்.

பீம்சிங்கன், அவன் வார்த்தையை நம்பி, ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனை போட்டான். உடனே அலாவுதீனும் இரண்டொரு வீரருடன் வந்து கண்ணாடியில், பேரழகி பத்மினியைப் பார்த்தான். ஏதேனும் சதி செய்து அவளைக் கவரவேண்டும் என்று எண்ணி, மனதில் சதித்திட்டம் தீட்டினான்.

“நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்பக்கூடாதா?” என்று பீம சிங்கனிடம் அலாவுதீன் சொன்னான். ரஜபுத்ர மன்னர்கள் வாய்;மையாளர்கள்; டில்லித் துலுக்கர்கள் போல உடல் முழுதும் நஞ்சு ரத்தம் ஓடுபவரல்ல. ஆகவே அலாவுதீனை நம்பி அவன் கூட குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், பீமசிங்கனைச் சூழ்ந்து கொண்டன. அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.

“உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான், உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன் என்று அலாவுதீன் சொன்னான். ஆனால் பீம சிங்கன் இணங்கவில்லை. இந்தச் செய்தி சித்தூர் வரை சென்றது.

பீமசிங்கனின் மனிவியான பத்மினி அறிவாற்றல் மிக்கவள்; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி, அலாவுதீன் கில்ஜிக்குச் செய்தி அனுப்பினாள். என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வரத்தயார். ஆயினும் ரஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம் என்றாள். அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.

சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் வீரர்கள். பல்லக்குகளில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “பத்மினி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்துவிட்டு உன்னிடம் வருவாள் என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “பத்மினியின் பல்லக்கை கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து பீமசிங்கனை குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தான். உடனே பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன.

ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான். இப்பொழுது பீமசிங்கன் பலவீனமான நிலையில் இருந்தான்; ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்துவிட்டான். ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது. தன் மகனை அருகாமையிலுள்ள ரஜபுதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர்துறந்தான் பீம சிங்கன்.

ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள்; அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் தீ வளர்த்தனர். அதில் எழுபத்தி நான்காயிரத்து ஐநூறு பெண்கள் பேரழகி பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர். வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும், வீரத்தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தன! இந்திய நாடு உள்ள வரை, பத்மினியின் புகழும் நீடிக்கும்!

ரஜபுதனக் கோட்டை கொத்தளங்களும், பாலைவன மணல் துகள்களும் இன்றும் கூட பத்மினியின் புகழைப் பாடிக்கொண்டிருக்கின்றன!

இந்த உண்மையான வரலாற்றை முஸ்லீம்களுக்கு எதிரானதாகவும் யாரும் தூக்கிப் பிடித்து அசிங்கப் பட மாட்டார்கள். ஆனாலும் மலேசிய அரசு வரலாற்றுப் புரிதல் இல்லாமல், இஸ்லாமியர்களை புண்படுத்துவதாக கூறி தடை செய்துள்ளது. இதுவும் மாறும்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,682

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.