Show all

என்னது விஷாலும் கீர்த்தி சுரேசும் இணைந்து ஒரு படம் நடிக்கிறாங்களா ? 

2005 ல் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற "சண்டை கோழி"  10  கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட படம் 30 கோடி வசூலை எட்டியது. மேலும் , 2005 ல் 100  நாட்களுக்கு திரையிடப்பட்ட முதல் விஷால் படம் இது தான் .  இதன் வெற்றியை தொடர்ந்து தற்ப்போது "சண்டை கோழி" படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதல் பகுதியை இயக்கிய என். லிங்குசாமியே இந்த இரண்டாம் பாகத்தயும் இயக்குகிறார். இப்படத்தில் , விஷால் , கீர்த்திசுரேஷ் , ராஜ்கிரண் ,வரலக்ஸ்மி சரத்குமார்,கஞ்சா கருப்பு  மற்றும் பரோட்டா சூரி நடித்து வருகின்றனர். 

அதோடு மீரா ஜாஸ்மினும் ஒரு சில நிமிடக்காட்சிகளில் வந்து போவார் என்று திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.வரலக்ஷ்மி சரத் குமார் இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஷாலின் "விஷால் பிலிம் பேக்டரி "  மற்றும் லிங்குசாமியின் "திருப்பதி பிரதர்ஸ்" இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

2014 ல் வெளியான "அஞ்சான்" படத்தை அடுத்து இயக்குனர் லிங்குசாமிக்கு வாய்ப்பு குடுக்க யாரும் முன்வரவில்லை. ஆனால், 2018 ல் காற்று அவர் பக்கம் வீசுகிறது என்றே கூறலாம். ஏனெனில் , தற்போது சூர்யா தம்பி கார்த்திக்கை வைத்து "எண்ணி ஏழு நாள்" படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு தான் "சண்டைக்கோழி 2 " படத்தின் வேலையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஞ்சான் படத்தின் தோல்வியில் இருந்து லிங்குசாமி  பாடம் கற்றாறாரா இல்லையா என்பது இவ்விரண்டு படம் திரைக்கு வரும் போது தான் தெரியும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.