Show all

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, எதற்கு வம்பு என்று, காவி நிறக் கடவுச்சீட்டு முயற்சியைக் கைவிட்டது பாஜக

17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடவுச்சீட்டின் கடைசி பக்கம் நீக்குவது மற்றும் காவி நிறத்தில் வெளியிடுவது ஆகிய முடிவுகளை கைவிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டு; முகவரி அடங்கிய இறுதி பக்கத்தை வெளியுறவுத்துறை நீக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.

மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் நீல நிற கடவுச்சீட்டு காவி நிறத்தில் மாற்றவும் அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் கடவுச்சீட்டு கடைசி பக்கத்தை நீக்கும் முடிவு மற்றும் காவி நிறத்தில் வழங்கும் முடிவுகளை கைவிட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் கடவுச்சீட்டு தற்போதைய நிலையிலேயே தொடரும் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

எதிர்வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து பாஜக மேற்கொள்ளும் நகர்வுகளில் இதுவும் ஒன்று.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,683

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.