Show all

மோடி ஆணையிட்டால், குதித்து விடுவார் எடப்பாடி பழனிச்சாமி கடலில்! தினகரன் தாக்கு!

25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு என்ன ஆணையிடுகிறதோ அதனை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறார் என தினகரன் தெரிவித்துள்ளார்.

இரா.கி.நகர் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் அனல் பறக்கும் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டுள்ளனர்.

விடுமுறை நாளான நேற்று இரா.கி.நகரின் ஐஓசி பகுதியில் தினகரன் கருத்ப் பரப்புதல் மேற்கொண்டிருந்தார்.

இரா.கி.நகர் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அவர் கூறினார். மேலும் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியமில்லை என்றும் தினகரன் விமர்சனம் செய்தார்.

நடுவண் அரசு என்ன ஆணையிடுகிறதோ அதனை நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராக இருக்கிறார் என்றும் கூறினார். நாட்குறிப்பு என்று கூறினாலே முதல்வர் பயப்படுகிறார் என்றும் தினகரன் தெரிவித்தார்.

தனது உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கும் ஆபத்து வந்துவிடுமோ என அவர் அஞ்சுவதாகவும் தினகரன் தெரிவித்தார். இதன் காரணமாக முதல்வர் வடக்கு பார்த்து கும்பிட்டப்படி இருக்கிறார் என்றும் அவர் சாடினார்.

டெல்லியில் இருப்பவர்கள் கடலில் குதி என்றாலும் முதல்வர் அதனை உடனடியாக செய்து விடுவார் என்றும், தினகரன் விமர்சித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,633

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.