Show all

நெஞ்சைத்தை கிள்ளாதே! கர்நாடக மக்களின் நெஞ்சத்தைக் கிள்ளிய சிம்பு; துடித்துப் போன கர்நாடக மக்கள்

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி பிரச்சினைக்கு சுமுத தீர்வு காண்பது குறித்து சிம்பு அழைப்பு விடுத்ததற்கு கர்நாடக மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதற்கான நிழற்படங்களும், காணெளிகளும்  குவிகின்றன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசை கண்டித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடிகர் சங்கம் சார்பில் அறவழி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இதற்கான விளக்கத்தை அவர் தனது இல்லத்துக்கு செய்தியாளர்களை அழைத்து தெரிவித்தார். அப்போது சிம்பு கூறுகையில் நடிகர் சங்கம் நடத்திய மவுன போராட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. மௌனமாக இருந்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது. காவிரி போராட்டத்திற்கு நாம் நேரடியாக மக்களிடம் சென்று தண்ணீர் கேட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும். நாம் கேட்டால் கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுப்பார்கள். தண்ணீர் இங்கு ஆறாய் ஓடியது. அதை சேமிக்க இத்தனை ஆண்டுகளாய் நாம் என்ன செய்தோம். 

தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் இன்று மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு குவளை தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து காணொளியாக வெளியிட வேண்டும் என்றும் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கர்நாடகத்தை சேர்ந்த இளைஞர் தமிழகத்துக்கு தண்ணீர் தருவது குறித்து ஆதரவு தெரிவித்து கன்னடத்தில் பேசியுள்ளார். 

அதுபோல் ரேகா ராணி என்ற பெண் காவிரி நீரை தருகிறோம் என்று ஒரு குவளை நீரை கொடுத்து காணொளி எடுத்துள்ளார். 

கர்நாடகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தண்ணீர் கொடுப்பது குறித்து ஆதரவாக பேசியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பெங்களூரில் பணிபுரியும் இளைஞரும், கன்னடர் ஒருவரும் அரசியல் பிரச்சினைகளுக்காகவே காவிரி விவகாரம் பெரிதாக்கப்படுகிறது. எனவே சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கின்றனர். மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் வழங்க வேண்டும் என்கின்றார்.

இரு மாநில இளைஞர்களும் ஒருவருக்கொருவர் தண்ணீரைப் பகிர்ந்து கொள்ளும் காட்சிகள் அடங்கியுள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் தேசியக்  கொடியை பறக்கவிட்டு தண்ணீரை குடித்துக் கொள்கின்றனர். சிம்புவின் வரவேற்பை ஏற்று இதுபோன்று ஏராளமான காணொளிகள், நிழற்படங்கள் குவிகின்றன. சிம்புவின் இந்த அழைப்பால், கர்நாடக மக்கள், அவர் எண்ணத்திற்கு தரும் ஆதராவால் மோடி, கர்நாடக முதல்வர் வஞ்ச நெஞ்சங்களில் ஈரம் சுரக்குமா?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,754.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.