Show all

சினத்தின் விளிம்பில் சந்திரபாபுநாயுடு! ஆந்திராவுக்கு சிறப்பு தகுதிக்கான, மோடியின் பாராமுகம் காரணம்

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திராவுக்கு சிறப்பு தகுதி வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தது.

      தேர்தலின் போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறப்பு தகுதி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளாகச் சொன்ன எதை நிறைவேற்றியிருக்கிறோம்? இதை நிறைவேற்ற என்று உள்நகையாடும் தொணியில் இருக்கிறது பாஜக.

      கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் இவ்விவகாரம் எதிரொலித்ததின் விளைவாக இரு அவைகளும் அம்மாநில பாராளுமன்றஉறுப்பினர்களால் முடக்கப்பட்டன. முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

      இந்நிலையில், இவ்விவகாரத்தில் பொறுமை இழந்துவிட்டதாகவும், ஆந்திராவுக்காக எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

      மேலும், “நடுவண் அரசு ஆந்திராவுக்கு அநீதி இழைத்து வருவதை தொடர்ந்தால் நாங்கள் அமைதியை தொடர முடியாது என்று தெரிவித்தார். இதற்காக 29 முறை டெல்லிக்கு சென்று மோடி மற்றும் அமைச்சர்களை தான் சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,702

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.