Show all

ஜெயநகர் இடைத் தேர்தலில் பாஜக தோல்வி! காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றி

30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெயநகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றிபெற்றார். 

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. சவுமியா ரெட்டி 54,457 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிரகலாத் 51,568 வாக்குகள் பெற்றார். பிறர் 1861 வாக்குகளை பெற்றனர். 2889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சவுமியா ரெட்டி.

பணக்காரர்களும், படித்தவர்களும் அதிகம் வசிக்கும் ஜெயநகர் தொகுதியில் இந்த தேர்தலின்போது மந்தமாகவே மக்கள் வாக்களித்திருந்தனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 55 விழுக்காடு பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர்.

இந்த இடைத்தேர்தல் வெற்றியின்  மூலம், சட்டசபையில் காங்கிரஸ் பலம் 79ஆக உயர்ந்துள்ளது. 

இடைத்;; தேர்தலில் மட்டும் பாஜக ஏன் தோற்கிறது என்கிற வழக்கமான  கேள்வி மீண்டும் எழுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,817.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.