12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலம் அஹமதாபாத் அரசு மருத்துவமனையில் 9 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் தீவிர நோய் தொற்று காரணமாக 9 குழந்தைகள் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 9 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில அரசால் நடத்தப்படும் மிக்பெரிய மருத்துவமனையில் நடைபெற்ற இந்த குழந்தைகள் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவர், குழந்தையியல் நிபுணர் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில் நடைபெற்ற இந்த குழந்தைகள் மரணம் பாஜகவை வெகுவாக பாதிக்கும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.