29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உத்தர பிரதேச பாரியா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் சிங், மீண்டும் மலரப் போகிற இராம இராச்சியத்தில், கடவுள் ராமரின் மறுபிறவியாக நரேந்திரமோடியும், லட்சுமணன் மற்றும் சந்திர குப்தரின் ஆலோசகரான சாணக்யர் போல் கடவுள் அமித்ஷாவையும் அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து இந்தியாவில் ராம ராச்சியத்தை உருவாக்குவார். கடவுள் அனுமாரும், முதல்வர் யோகிக்கும் உள்ள ஒற்றுமை, இருவரும் பிரம்மச்சாரிகள். ராமர், லட்சுமணன் மற்றும் அனுமான் இணைந்து இந்தியாவில், ராமராஜ்யத்தை ஏற்படுத்துவார்கள். தேசிய அரசியலிலும் ராம ராஜ்யம் உருவாகும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சூர்ப்பனகை போல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இவர்கள் கற்பனையில் கூட தமிழகம் இடம் பெறாததுதான் நமக்கான மகிழ்ச்சி. இராமயணத்தின் கதைபாத்திரங்கள் யாரும் ஆரியர் அல்லாதவர்கள் இல்லை என்பதை மீண்டும் சுரேந்தர் சிங் தன் கற்பனையிலும் நிறுவியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,785.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.