Show all

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அறங்கூற்றுவர் கைது

30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலுங்கானா மாநிலத்தில் உரிமையியல் அறங்கூற்றுவர் சத்திய நாராயணராவ் அகவை 28 மீது பாலியல் புகார் எழுந்து உள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் அளித்த புகாரில், அறங்கூற்றுவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து, ஏமாற்றியதாகவும், இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு நிச்சயதார்த்தம் செய்து உள்ளதாகவும் கூறி உள்ளார்.

இந்தப் புகாரின்மீது காவல்துறையினர் பாலியல் அத்துமீறல் தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப் பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து உரிமையியல் அறங்கூற்றுவர் சத்தியநாராயணராவை நேற்று கைது செய்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,880.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.