30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையுலகில் பெண் துரைச்சியாக இயங்கி வரும்; நயன்தாரா மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு கதைத்தலைவியாக நடிக்க உள்ளார். படத்திற்கு எஸ்கே 13 என்று தற்காலிகமாக பெயரிடப் பட்டுள்ளது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயனின் எஸ்கே 13 படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தை எம்.ராஜேஸ் இயக்க உள்ளார். ஹிப்பாப் தமிழன் ஆதி இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பரான சதீசும் இப்படத்தில் நடிக்கிறாரார். இந்நிலையில் வேலைக்காரனில் சிவகார்த்திகேயனுக்கு கதைத்தலைவியாக நடித்த நயன்தாரா, இந்த புதிய படத்திலும் கதைத்தலைவியாக நடிக்க உள்ளார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,880.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.