Show all

மிகப்பெரிய ஊழல்வாதி எடியூரப்பா என கூறி, உடனடியாக மாற்றிக் கொண்டு சித்தராமையா என்றார் அமித்ஷா

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்தில் வரும் 29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120 ல் (12.05.2018) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளாராக எடியூரப்பா களம் காண்கிறார். 

இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, எடியூரப்பாதான் உண்மையிலேயே மிகப்பெரிய ஊழல்வாதி என்று கூறினார். உடனடியாக அமித்ஷா, சித்தராமையா என்று மாற்றிப் பேசினார்.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் மிகவேகமாகப் பரவியது குறிப்பாக காங்கிரஸ் தொண்டர்கள் தங்களால் எவ்வளவு வேகமாக பரப்ப முடியுமோ அந்த அளவுக்கு பகிர்ந்தனர். இந்த காணொளி குறித்து முதல்வர் சித்தராமையா டுவிட்டரில் கூறுகையில், கடைசியில் பாஜக தலைவர் அமித்ஷா உண்மையை பேசிவிட்டார். நன்றி அமித் ஷா அவர்களே எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் திவ்யா ஸ்பந்தனா கீச்;சுவில் கூறுகையில், யாருக்கு தெரியும் பாஜக தலைவர் அமித் ஷா கூட உண்மையை பேசலாம். நாங்கள் உங்கள் கருத்தை ஆதரிக்கிறோம். உண்மையில் பாஜகதான் ஊழல் நிறைந்தகட்சி. எடியூரப்பாவை குறித்து தான் என்ன நினைக்கிறேன் என்று அமித் ஷா சொல்லிவிட்டார் என்று பதிவிட்டுள்ளார். 

இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பலரும் பாஜக தலைவரின் பேச்சை கிண்டல் செய்து, விமர்சனம் செய்து வருகின்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,739.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.