Show all

சபரிமலைக்கு அனைத்து அகவைப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்: ராகுல் காந்தி

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள், சபரிமலை விவகாரத்தில் உங்களின் கருத்து என்ன என்று கேட்ட போது: இது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பது கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறுபட்டு இருக்கும்.

உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்புப்படி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வழிபாடு செய்ய அனைத்து அகவைப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் உள்ள என்னுடைய காங்கிரஸ் கட்சி அந்த மண்ணின் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப இந்த விசயத்தை அணுகுகிறார்கள். ஆதலால், இந்த விசயத்தில் என்னுடைய கருத்து வேறு, கேரள காங்கிரஸ் கட்சியின் கருத்து வேறு. என்று தெரிவித்தார்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,956.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.