Show all

பெங்களூருவில் 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

பெங்களூருவில் 7 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரு பெல்லாந்தூர் பகுதியில் ஹெச்.எஸ்.ஆர் காவல் நிலையம் அருகே 7 மாடி கட்டடம் ஒன்றில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில் அந்தக் கட்டடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டட தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தரமற்ற கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டியிருப்பதால் கட்டடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.